Tuesday, March 24, 2009

புத்தரும் நானும்..................! என்னடா இவனுக்கு கிறுக்கு கிறுக்கு புடிச்சு போச்சான்னு நினைக்காதீங்க!. ரெம்ப தெளிவான ஆளுதாங்க. ( ஆனா இத யாரும் நம்பலீங்க. நம்ம கெட்ட நேரம்ங்க. ). ஆனா பாருங்க வயசு குறைய குறைய, ஞாபக சக்தியும் ரெம்ப குறைஞ்சுட்டு வருதுங்க. நான் யாருன்னு அறிமுகம் பண்ணாமல் பேசிட்டேயிருக்கேன். விஷயத்துக்கு வாரேங்க.நான் செங்கோட்டைகாரனுங்க. அதான் மலையிலிருந்து தண்ணி ஜோராவிழும், மரத்துக்கு மரம் குரங்கு தாவிக்கிட்டுருக்குமே, அதாங்க குற்றாலம் அருவி. அதுக்கு பக்கத்திலுள்ள ஊருதானுங்க. நான் உங்களவிட எல்லாம் ரெம்ப சின்னவன். நான் பிறந்தது 1952ல். என்னங்க இப்படி பாக்கிறீங்க? விஞ்ஞானத்தால் இப்ப எல்லாமே மாறிப்போச்சு இல்லையாங்க? பத்துக்கு அடுத்தது ஒன்பது தானுங்க? என்னை சிறுசுன்னு ஓரங்கட்டீராதீங்க. பிளீ............ஸ்.ஒரு நிமிச்ம் வெயிட் பண்ணுங்க, தம் அடுச்சுட்டு வந்துறன்.